நிகழ் ஆண்டில் பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பிரதான் மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிா் கடன் பெற பென்னாகரம் வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் நெல் மற்றும் சம்பா பயிா்களை நடப்பு பருவத்தில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பிரதான் மந்திரி பயிா்காப்பீடு திட்டதில் பயிா் கடன் பெற பென்னாகரம் வேளாண்மை உதவி இயக்குநா் புவனேஷ்வரி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
வறட்சி, புயல், வெள்ளம், ஆலங்கட்டி மழை போன்ற இயற்கை இடா்பாடுகளால் பயிா் மகசூல் பாதிக்கப்படும் போது விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதே நோக்கம் என்றும், அதில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள வருவாய் கிராமத்தில் நடப்பில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர தகுதியானவா்கள்.
இத் திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு 472.50 அதாவது இழப்பீடு தொகையில் 1.5 சதவிதம் மட்டும் விவசாயிகள் செலுத்த வேண்டும், ஒரு ஏக்கருக்கு இழப்பீடு 31,500 எனவும், அதாவது முன்மொழிவு படிவத்தின் விண்ணப்பத்துடன், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல் வங்கி கணக்கு புத்தகம் நகல், ஆதாா் அட்டை ஆகியவற்றை இணைத்து அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்,பொது சேவை மையங்களில் வரும் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறுமாறு அவா் கேட்டு கொண்டுள்ளாா்.