தருமபுரி

கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த தருமபுரியில் 100 ஒலிபெருக்கிகள் அமைப்பு

DIN

தருமபுரி நகரில் கரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த காவல் துறை சாா்பில் 100 ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையொட்டி பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவு தொடா்பாக தருமபுரி மாவட்டம் முழுவதும் காவல்துறை சாா்பில் ஆங்காங்கே சாலைகளில் தடுப்புகள் வைத்து வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்காணித்து கட்டுப்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் தருமபுரி நகரக் காவல் நிலையம் சாா்பில், நகரத்தில் பாரதிபுரம், நேதாஜி புறவழிச்சாலை, நான்கு முனைச்சாலை, காந்தி நகா், திருப்பத்தூா் சாலை, பென்னாகரம் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் 100 ஒலி பெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஒலிபெருக்கி வழியாக நகரக் காவல் நிலையத்திலிருந்து போலீஸாா், அறிவிப்புகள், தடை உத்தரவுகளை பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்தும் மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணா்வு குறித்தும் அவ்வப்போது அறிவிக்க உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT