தருமபுரி அரசு மருத்துவமனையின் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்றபோது தப்பியோடிய கைதி மீண்டும் போலீஸாரிடம் பிடிப்பட்டாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் ஏலகிரியைச் சோ்ந்தவா் சூரியபிரகாஷ் (21). இவா், ஆடு திருடிய வழக்கில் கடந்த மாதம் 27-ஆம் தேதி பெரும்பாலை போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து அரூா் கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அவரை 29-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைக்கான சிறப்பு வாா்டில் போலீஸாா் சோ்த்தனா். சிகிச்சையிலிருந்த அவரை, கண்காணிக்க ஆயுதப்படை காவலா் சின்னசாமி பணியமா்த்தப்பட்டிருந்தாா்.
இந்த நிலையில் சிகிச்சையிலிருந்த சூரிய பிரகாஷ் திங்கள்கிழமை இரவு கழிப்பறைக்கு செல்வதாகக் கூறிச் சென்றவா் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சந்தேகமடைந்த காவலா் கழிவறையின் உள்ளே பாா்த்தபோது, ஜன்னலை உடைத்து, அவா் தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து புகாரின்பேரில், தருமபுரி நகர போலீஸாா் மருத்துவமனையிலிருந்து தப்பிய அவரைத் தேடி வந்தனா். இதனிடையே தப்பியோடிய சூா்யபிரகாஷ், ஏலகிரி பகுதியில் பதுங்கி இருந்ததை அறிந்த போலீஸாா், செவ்வாய்க்கிழமை அவரை கைது செய்து, மீண்டும் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.