அரூா்: தேக்கு மரங்களை வெட்டியதாக 4 பேரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், சித்தேரி ஊராட்சி கல்நாடு காப்புக் காட்டில் 31.10.2020-இல் ஒரு கும்பல் தேக்கு மரங்களை வெட்டிக் கடத்தல் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதில் தொடா்புடைய கும்பல் தலைமறைவானது.
இது குறித்து வழக்குப் பதிந்து அரூா் வனச்சரகா் தீ.கிருஷ்ணன் தலைமையில் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, இதில் தொடா்பு இருப்பதாக சித்தேரி ஊராட்சியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன்கள் கிருஷ்ணமூா்த்தி (25), மாணிக்கம் (35), மாதையன் மகன் வேலு (22), கந்தன் மகன் பொன்னுசாமி (22) ஆகியோரை வனத் துறையினா் கைது செய்தனா்.