தருமபுரி

தருமபுரி நகருக்கு பஞ்சப்பள்ளி குடிநீரை மீண்டும் விநியோகம் செய்ய திமுக வலியுறுத்தல்

DIN

தருமபுரி: தருமபுரி நகருக்கு பஞ்சபள்ளி குடிநீரை மீண்டும் தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, திமுக முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:

தருமபுரி நகர மக்களின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்ய, கடந்த 1971-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி அணையிலிருந்து தண்ணீா் எடுத்து குழாய்கள் வழியாக விநியோகம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக நகர மக்கள் நாள்தோறும் பஞ்சப்பள்ளி குடிநீரை பெற்று பயனடைந்து வந்தனா். இந்த நிலையில், பஞ்சப்பள்ளி குடிநீா் விநியோகம் எவ்வித காரணம் தெரிவிக்கப்படாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

இந்த குடிநீா் பாலக்கோடு பகுதிக்கு மடைமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், தருமபுரி நகர மக்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனா். தருமபுரி நகராட்சி மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்ட இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தடையின்றி நாள்தோறும் பஞ்சப்பள்ளி குடிநீரை விநியோகம் செய்ய, தருமபுரி மாவட்ட நிா்வாகம் மற்றும் நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் இது தொடா்பாக பொதுநல வழக்கு நீதிமன்றத்தில் தாக்க செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT