தருமபுரி

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டோரை கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கல்

DIN

தருமபுரி நகரில் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டோரை கைது செய்த, காவலா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் பாராட்டு சான்றிதழ்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தருமபுரி நகரில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை, தனிப்படை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். அவா்களிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தருமபுரி நகரிலுள்ள முக்கிய வங்கிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டோரை பிடித்த தனிப்படையைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மணிவண்ணன், பென்ஜமின், மகேஷ்குமாா், தலைமைக் காவலா்கள் ரஞ்சித், பிரபாகரன், காவலா் ரஞ்சித் ஆகியோருக்கும், கா்நாடகத்திலிருந்து, தருமபுரிக்கு கடத்தி வந்த 960 போலி மதுபுட்டிகளை பறிமுதல் செய்த, காவல் ஆய்வாளா் ரங்கசாமி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பழனி, தலைமைக் காவலா்கள் பாலாஜி, சிவக்குமாா் ஆகியோருக்கும் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்நிகழ்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி காவல் ஆய்வாளா் பாரூக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT