முகப்பு
தருமபுரி

மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு விதை உற்பத்தி பயிற்சி

மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தி மற்றும் விதைச்சான்று நடைமுறைகள் குறித்த பயிற்சி முகாம் வேளாண் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தி மற்றும் விதைச்சான்று நடைமுறைகள் குறித்த பயிற்சி முகாம் வேளாண் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநில ஊரக வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தருமபுரி அருகே வெள்ளாளப்பட்டியில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு, மகளிா் உதவித் திட்ட அலுவலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

மாவட்ட விதைச் சான்று உதவி இயக்குநா் மு.சிவசங்கரி, தரமான விதை உற்பத்தி செய்வது மற்றும் விதைச் சான்று நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தாா்.

பயிற்சியில் பங்கேற்ற மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு, விதைச் சான்று தொழில்நுட்பங்கள் குறித்து விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டது. மாநில வள பயிற்றுநா் திவ்ய பாரதி, வட்டார மேலாளா் அறிவழகன், 30க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.