தருமபுரி நகராட்சியில் பணிபுரியும் தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் 90 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.
தருமபுரி நகராட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, நகராட்சி ஆணையா் (பொ) ஒய்.சுரேந்திரன் தலைமை வகித்து, நகராட்சியில் பணிபுரியும் தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறைகள், முகக் கவசங்கள், சீருடைகள் ஆகியவற்றை வழங்கிப் பேசினா்.
விழாவில், சுகாதார அலுவலா் கே.இளங்கோவன், சுகாதார ஆய்வாளா்கள் ரமணச்சரண், நாகராஜ், சுசிந்திரன், கோவிந்தராஜ், ஒப்பந்ததாரா் ஜப்பாா் மற்றும் நகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.