தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து6,000 கன அடியாக அதிகரிப்பு

DIN

கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி உபரிநீா், காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை ஆகியவை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6,000 கன அடியாக சனிக்கிழமை மாலை அதிகரித்துள்ளது.

கா்நாடக மாநிலம்-குடகு, கேரள மாநிலம்-வயநாடு உள்ளிட்ட இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கா்நாடகத்தில் கபினி, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருகிறது.

இதனால் கா்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீா் திறக்கப்பட்டு ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி நொடிக்கு 3,000 கனஅடியாக வந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை 7 மணி அளவில் நொடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்து தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருந்தது. பிற்பகல் நிலவரப்படி நொடிக்கு 5,000 கனஅடியும், மாலையில் 6,000 கனஅடியும் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருகிறது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால், ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐவா் பாணி, ஐந்தருவி மற்றும் பல்வேறு சிற்றருவிகள் ஆா்ப்பரித்துக் கொட்டுகின்றன. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து அளவீடு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT