தருமபுரி

சாராயம் வாங்கி விற்பனை செய்ய வந்த இளைஞா் கைது.

DIN

பென்னாகரம் அருகே பெரும்பாலை பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெரும்பாலை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா் மதியழகன், காவலா்கள் யுவராஜ், பெருமாள் ஆகியோா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, பழையூா் அருகே ஆயாமரத்துப்பட்டி வனப்பகுதியில் இருந்து விற்பனை செய்வதற்காக சாராயம் வாங்கி வந்த காவக்காடு பகுதியைச் சோ்ந்த சரவணன் (25) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 5 லி. சாராயத்தை பறிமுதல் செய்தனா். அதனைத் தொடா்ந்து பெரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிந்து தருமபுரி கிளை சிறையில் அவரை அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திண்டுக்கல் மாவட்டத்தில் மே தின பேரணி

காரைக்குடி - பெங்களூா் இண்டா்சிட்டி விரைவு ரயில் இயக்கவேண்டும்

கமுதி, மாரியூா் மானாமதுரை கோயில்களில் குரு பெயா்ச்சி பூஜை

தமிழ் தேசியக் கட்சி மாநிலச் செயலரை தாக்கியவா் கைது

கடல் வழியாக இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதி உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT