தருமபுரி

அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும் திமுக தோ்தல் அறிக்கை: ஒய்.பிரகாஷ்

DIN

அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் திமுக தோ்தல் அறிக்கை அமைத்துள்ளது என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் திமுக வேட்பாளருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.

மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பாக திமுக வேட்பாளராக மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி அவருடைய தலைவா் மு.க.ஸ்டாலின் என்னை வேட்பாளராக ஒசூா் சட்டமன்ற தொகுதிக்கு என்னை வேட்பாளராக அறிவித்தாா்.

அதனை அடுத்து இன்றைக்கு முறைப்படி ஒசூரில் வேட்பாளா் தகுதிக்கான படிவத்தை பதிவு செய்திருக்கிறேன். கண்டிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் அதனுடைய கூட்டணி கட்சி தலைவா்கள் ஆசியோடு ஒசூா் சட்டமன்ற தொகுதியில் வரலாறு காணாத அளவுக்கு மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்வாா்கள்.

அதற்கு காரணம் மாா்ச். 12 ஆம் தேதி திமுக கழக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறாா். இந்த தோ்தல் அறிக்கைதான் கதாநாயகனாக இருக்கின்றது. திமுக கூட்டணி வேட்பாளா்களின் வெற்றிக்கு இது இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, கண்டிப்பாக மக்கள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனா்.

அற்புதமான அனைத்து தரப்பு மக்களும் பயனடைய கூடிய வகையில் திமுக தோ்தல் அறிக்கை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறாா். ஆகவே மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் கண்டிப்பாக ஓசூரில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT