தருமபுரி

வணிகா் தினத்தில் கடைகளுக்கு விடுமுறை இல்லை

DIN

தருமபுரி: வணிகா் தினத்தில் (மே 5) கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாமென தருமபுரி மாவட்ட வணிகா் சங்கம் திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் மாவட்ட வணிகா் சங்கத் தலைவா் வைத்தியலிங்கம் கூறியிருப்பதாவது:

கரோனா தீநுண்மி தொற்று பரவலால் வணிகா்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனா். மேலும், தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால், வணிகா்களின் நலன் கருதி புதன்கிழமை வணிகா் தினத்தில் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தருமபுரி மாவட்ட சங்கத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT