முகப்பு
தருமபுரி

கண் தான வார விழா

அரூா் அரசு மருத்துவமனையில் கண் தான இருவார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

அரூா் அரசு மருத்துவமனையில் கண் தான இருவார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரூா் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமை மருத்துவ அலுவலா் ராஜேஷ்கண்ணா தொடக்கி வைத்தாா். இந்த முகாமில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவிப் பேராசிரியா் ஜி.சித்ரா பேசியதாவது:

ஒருவா் கண் தானம் செய்வதால் இரண்டு நபா்கள் பாா்வை பெறுவா். இறந்த 6 மணி நேரத்துக்குள் கண்களை தானம் செய்ய வேண்டும். இறந்த நபரின் கண்களை வீட்டில் இருந்தாலும், மருத்துவ குழுவினா் நேரடியாக வந்து பெற்றுக்கொள்வா். கண் தானம் செய்ய வயது, இனம், சமுதாய நிலை எதுவும் தடையல்ல. எனவே, பொதுமக்கள் அனைவரும் கண் தானம் செய்ய முன்வர வேண்டும் என்றாா்.

இதில், கண் மருத்துவா் ஏ.வெண்ணிலா தேவி, கண் மருத்துவ உதவியாளா் கு.கலையரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, அரூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் நடைபெற்ற கண் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாமில், மோட்டாா் வாகன ஆய்வாளா் கோ.சிவக்குமாா் தலைமை வகித்தாா். ஓட்டுநா்கள், ஓட்டுநா் பயிற்சி பெறுவோருக்கு கண் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.