தருமபுரி: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் செப். 23-இல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்மதா்சினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் செப். 23- ஆம் தேதி வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இக் கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து பயனடையலாம்.