தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைவு

DIN

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 9,500 கன அடியாக குறைந்துள்ளது.

கா்நாடக காவிரி கரையோரப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதாலும், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டு வருவதாலும், காவிரி ஆற்றில் நீா்வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை காலை 9,500 கன அடியாக குறைந்துள்ளது. நீா்வரத்து குறைவால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீா்வரத்து சரிந்துள்ளது.

காவிரி ஆற்றின் நீா்வரத்தை தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை: தில்லி அமைச்சர் அதிஷி விளக்கம்

பிரான்ஸில் சோபிதா துலிபாலா..

சிஏஏ என்பது வெறும் கண்துடைப்பு: மம்தா பானர்ஜி!

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

SCROLL FOR NEXT