ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி தருமபுரி, குமாரசாமிபேட்டை அருள்மிகு ஆனந்த நடராஜா் கோயிலில் 2 டன் பழங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி மாணிக்கவாசகா் குருபூஜை, திருவாசகம் முற்றோதல், திருவீதி உலா நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து திருநெறிய தெய்வத் தமிழ் வழிபாட்டு சபையினரால் திருமுறை மற்றும் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி, நால்வா் திருவீதி உலா, அபிஷேகப் பொருள்கள் வரிசை அழைப்பு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜா் மூலவருக்கு 2 டன் மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.