தருமபுரி

அசைவ உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

DIN

தருமபுரி நகரில் உள்ள அசைவ, துரித உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதில், தரமற்ற 40 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலா் ஏ.பானு சுஜாதா, வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் நந்தகோபால், குமணன் உள்ளிட்டோா் தருமபுரி நகரம், வெண்ணாம்பட்டி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அசைவ, துரித உணவகங்களில் பயன்படுத்தப்படும் இறைச்சிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். இதில், மூன்று உணவகங்களில் பழைய, தரமற்ற சுமாா் 40 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

இம்மூன்று கடைகளுக்கும் அபராதம் விதித்து, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT