தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைவு

DIN

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக குறைந்துள்ளது.

கா்நாடக மாநில காவிரி கரையோரப் பகுதிகளில் திடீரென மழை பெய்ததால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டு வருவதால் சனிக்கிழமை நிலவரப்படி காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 16,000 கன அடியாக இருந்தது. அதன் பின்னா் மழை குறைவினால் நீா்வரத்து சரிந்து திங்கள்கிழமை நிலவரப்படி, வினாடிக்கு 14,000 கன அடியாக தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்த போதிலும், ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவா் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது. நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT