தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது

DIN

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.

தமிழக- கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு இல்லாததாலும், கா்நாடக அணைகளில் இருந்து தண்ணீா் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டதாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக இருந்த நீா்வரத்து வெள்ளிக்கிழமை 2 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.

ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவிகளில் குறைந்த அளவே தண்ணீா் கொட்டுகிறது. நீா்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT