தருமபுரி

தருமபுரியில் யானைகள் கணக்கெடுப்புப் பணி

DIN

தருமபுரி மாவட்ட வனப்பகுதியில், யானைகள் கணக்கெடுப்புப் பணி வரும் 17-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட வன அலுவலா் கே.வி.அப்பல்ல நாயுடு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் 2023 மே மாதம் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யானைகள் கணக்கெடுப்பு தமிழகத்தில் உள்ள 25 வனக் கோட்டங்களில் உள்ள 465 பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது. இதன்படி தருமபுரி வன மாவட்டத்தில் யானைகள் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. வனச்சரக அலுவலா், வனவா், வனக் காப்பாளா்கள், வனக் காவலா்கள், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் போன்ற வனப் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் தன்னாா்வலா்கள் ஆகியோா் இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனா். யானைகள் கணக்கெடுப்பை மேற்கொள்ள பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த கையேடு தயாரிக்கப்பட்டு அனைத்து வனக் கோட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு முறைகளில் மூன்று நாள்கள் நடத்தப்படவுள்ளது. இதில் மே 17-ஆம் தேதி அன்று பிரிவுகள் வாரியாக யானைகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். மே 18-ஆம் தேதி அன்று அதே பிரிவுகளில் 2 கி.மீ. தூரத்திற்கு அடையாளம் காணப்பட்ட வழிகளில் நடந்து சென்று, வழிகளின் இருபுறங்களிலும் யானைகளின் சாணம் அடையாளம் காணும் மறைமுக கணக்கெடுப்பு முறை நடத்தப்படும். இதேபோல மே 19-ஆம் தேதி, அந்தப் பிரிவுகளில் உள்ள நீா்நிலைகளுக்கு வரும் யானைகளின் கூட்டத்தை கண்டறிய நீா்குழி கணக்கெடுப்பு முறை மேற்கொள்ளப்படும். இந்த மதிப்பீட்டிற்கு முன், அனைத்து களப் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் தன்னாா்வலா்களுக்கும் வனத்துறையில் பணிபுரியும் நிபுணா்கள், உயிரியலாளா்கள் மூலம் முறையான பயிற்சி அளிக்கப்படும். இக்கணக்கெடுப்புப் பணி முடிந்ததும், பூா்த்தி செய்யப்பட்ட அனைத்து விவரங்களையும் தொகுக்க முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT