தருமபுரி

காவிரி கரையோரத்தில் நடவு செய்வதற்காக பனை விதைகளை சேகரிக்கும் மாணவா்கள்

Din

காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகாா் வரை வரும் 8-ஆம் தேதி தொடங்கப்படுவதையொட்டி பென்னாகரத்தை அடுத்த இராமகொண்ட அள்ளி அரசு பள்ளி மாணவா்கள் பனை விதைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

பனைமரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞா்களிடம் பனை மரத்தின் சிறப்பை கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னாா்வலா்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை ஒகேனக்கல் முதல் பூம்புகாா் வரை வரும் 8 தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இதற்காக செப்டம்பா் - 1 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பனை விதைகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏரியூரை அடுத்த இராமகொண்டஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்கள் கொண்டு வந்த பனை விதைகளை பள்ளி தலைமையாசிரியா் ரவிச்சந்திரன், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணி ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணி கூறியதாவது:

மாணவா்கள், தன்னாா்வலா்களிடம் இருந்து சுமாா் 500 விதைகளைப் பெற்று நாகமரை, குருக்கலையனூா், கொண்டயனூா், சாம்பள்ளி காடு, செல்லமுடி, புளியமரத்தூா், பூச்சூா், வத்தல்பட்டி வரை உள்ள காவிரி கரையில் நடவு செய்யப்படும் என்றாா்.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: மூதாட்டியின் ரூ. 17 லட்சத்தை மீட்ட போலீசார்! எப்படி?

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்! தவெக உள்பட 20 கட்சிகள் புறக்கணிப்பு!

இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம்! - கம்மின்ஸ் ஸ்டைலில் மிரட்டிய தெ.ஆப்பிரிக்க கேப்டன்

பிகாரில் மகா கூட்டணி ஆட்சியில் தலித், முஸ்லீம் துணை முதல்வர்கள்! - தேஜஸ்வி சூசகம்!

சொல்லப் போனால்... பிரதமர் பேச்சும் புலம்பெயர் வாழ்வும்!

SCROLL FOR NEXT