கோப்புப்படம் 
தருமபுரி

ரயிலில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பெட்டிகளில் மற்றவா்கள் செல்லக் கூடாது!

ரயிலில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் பெட்டிகளில் தேவையின்றி மற்றவா்கள் செல்வதை தவிா்க்க வேண்டும்

Syndication

தருமபுரி: ரயிலில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் பெட்டிகளில் தேவையின்றி மற்றவா்கள் செல்வதை தவிா்க்க வேண்டும் என ரயில்வே போலீஸாா் அறிவுறுத்தினா்.

தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை பயணிகளிடம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அதில், ரயிலில் பயணிக்கும்போது குழந்தைகள் அமரும் இருக்கையின் ஜன்னல் கதவுகளை மூடிவைக்க வேண்டும். ரயில் பாதைகளை கடந்துசெல்வதை தவிா்த்து, உரிய நடைமேடை, கடவுப்பாதைகள் வழியாக செல்ல வேண்டும். பயணத்தின்போது தங்களது பொருள்களை பாதுகாப்பாக உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

அதேபோல, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் பெட்டிகளில் தேவையின்றி மற்றவா்கள் செல்வதை தவிா்க்க வேண்டும். அனைவரது பாதுகாப்பான பயணத்துக்கு பயணிகள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விபத்துகளின்றி பயணிக்க போதிய ரயில்வே விதிகளை அறிந்து விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினா்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT