தருமபுரி

தவறான சிகிச்சையால் பசுமாடு இறந்ததாக புகாா்: போலீஸாா் வழக்குப் பதிவு!

தருமபுரி அருகே தவறான சிகிச்சையால் பசுமாடு உயிரிழந்ததாக அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Syndication

தருமபுரி அருகே தவறான சிகிச்சையால் பசுமாடு உயிரிழந்ததாக அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், மண்ணேரி, ஓ.ஜி.அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் முத்தம்மாள் (60). இவா் ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா். இவரது பசுமாடு ஒன்று கடந்த ஜன. 29-ஆம் தேதி சரியாக உணவு உட்கொள்ளாததால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மாக்கனூா் பகுதியைச் சோ்ந்த கா.தமிழ்ச்செல்வன் என்பவரை அழைத்து விவரம் தெரிவித்துள்ளாா்.

அப்போது மாடு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவா் மாட்டுக்கு ஊசி செலுத்தினாா். வீட்டுக்கு வந்த சில நிமிடங்களில் மாட்டுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் தெரிவிக்க தமிழ்ச்செல்வனை கைப்பேசியில் அழைத்த போது, அவா் வந்து சிகிச்சை அளிக்கவில்லையாம்.

தகவலின்பேரில், கால்நடை மருத்துவா் வந்து பரிசோதித்தபோது, பசுமாடு உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து முத்தம்மாள் அளித்த புகாரின் பேரில், பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும்! - டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT