கிருஷ்ணகிரி

வீட்டில் இருந்த பெண்களிடம் கத்தியைக் காட்டி நகை, பணம் கொள்ளை

தினமணி

போச்சம்பள்ளி அருகே வீட்டில் இருந்த பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணத்தை மர்ம கும்பல் புதன்கிழமை இரவு பறித்துச் சென்றது.
 போச்சம்பள்ளியை அடுத்த அத்திகானூர் அருகே எத்திராஜ் கொட்டாய் எனுமிடத்தில் வசித்து வருபவர் மூர்த்தி. இவரது வீடு தென்னந்தோப்பில் தனியாக உள்ளது. மூர்த்தி தற்போது உடல்நிலை சரியில்லாமல் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 மூர்த்தி வீட்டில் இல்லாததை அறிந்த 6 பேர் கொண்ட கும்பல் புதன்கிழமை இரவு 7 மணிக்கு முகமூடி அணிந்தபடி அவரது வீட்டிற்குள் புகுந்து வீட்டிலிருந்த அவரது தாயார் பேபி (67) மனைவி ராணி (45), மகன் தமிழ்வீரபாண்டியன் (25) ஆகியோர் கழுத்தில் கத்தியை வைத்து அவர்கள் அணிந்திருந்து கம்மல், மோதிரம் என 2 பவுன் நகை, பீரோவிலிருந்த ரூ. 10 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT