கிருஷ்ணகிரி

லாரி மோதியதில் தொழிலாளி சாவு

DIN

ஒசூரை அடுத்த சிப்காட்டில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
ஒசூர் அருகே உள்ள அத்திப்பள்ளியைச் சேர்ந்தவர் சுரேந்திரபாபு (37). பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார். இவர் சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் பெங்களூரு- ஒசூர் சாலையில் சிப்காட் அருகே சென்று கொண்டிருந்தார். 
அப்போது, அந்த வழியாக வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த சுரேந்திரபாபுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே சுரேந்திரபாபு உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT