போச்சம்பள்ளியில் முத்து பிரதர்ஸ் சார்பில் 39-ஆம் ஆண்டு கபடி போட்டி புதன்கிழமை (பிப்.14) நடைபெறுகிறது.
இப்போட்டியில் பங்கு பெறும் அணிகளுக்கு பரிசு முறையே வழங்கப்படுகிறது. போட்டிக்கு திமுக ஒன்றியச் செயலர் சாந்தமூர்த்தி, கூட்டுறவு சங்கத் தலைவர் தூயமணி தலைமை வகிக்கின்றனர். முன்னாள் கவுன்சிலர் செல்வம், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர் திருமால், முன்னாள் தலைவர் சக்கரவர்த்தி, தொழில்அதிபர் ரங்கநாதன், கபடிக் குழுத் தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மனோகரன் வரவேற்றுப் பேசுகிறார். எம்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைவர் பன்னீர், காவல் ஆய்வாளர் மனோகரன் ஆகியோர் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்குகின்றனர். விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை முத்துக் கபடி குழுவினர் செய்து வருகின்றனர்.