கிருஷ்ணகிரி

ஆணவப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

DIN

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ் குடும்பத்திற்கு தி.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. 
ஒசூர் அருகே ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சூடகொண்டப்பள்ளி நந்தீஷ் குடும்பத்தினருக்கு தி.க. சார்பில் ரூ. 1லட்சம் நிதி உதவியை, ஒசூர் பாகலூர் அட்கோவில் உள்ள பெரியார் படிப்பகத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியின்போது பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட தி.க. தலைவர் வனவேந்தன், மாவட்டச் செயலாளர் செல்வம், அமைப்பாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாநில அமைப்பாளர் குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஜெயராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வணங்காமுடி மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக, பெரியார் படிப்பகத்தில், தி.க.கொடியை அன்புராஜ் ஏற்றி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT