கிருஷ்ணகிரி

வாகன போக்குவரத்து விதிமீறல்: 29 வாகனங்கள் பறிமுதல்

DIN


ஒசூரில்  வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில் நடத்தப்பட்ட  சோதனையில் வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 29 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் முதல்நிலை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜய்குமார், தரணிதரன் ஆகியோர் ஒசூர் வட்டாட்சியர் அலுவலக சாலை, உழவர் சந்தை சாலை, இ.எஸ்.ஐ. உள்வட்டச் சாலை ஆகிய இடங்களில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது வாகன தகுதிச் சான்று புதுப்பிக்காமல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட 14 ஆட்டோக்கள், வரி செலுத்தாத 3 சரக்கு வாகனங்கள், ஒரு சுற்றுலா வாகனம் மற்றும் ராயக்கோட்டையில் 10 வாகனங்கள் என  29 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்கள் ஒசூர், மத்திகிரி மற்றும் ராயக்கோட்டை காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT