கிருஷ்ணகிரி

தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் பலி

DIN

அரூா் அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அரூா் வட்டம், கோணம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி ஜெயபால் மகன் ஜெயவேல் (19). இவா் அரூா் அரசுக் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில், தமது சொந்த வேலையின் காரணமாக தீா்த்தமலைக்கு சென்றுவிட்டு, அரூா்-தீா்த்தமலை சாலையில் அரூா் நோக்கி வந்துள்ளாா். அப்போது, அரூரில் இருந்து தீா்த்தமலை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் ஜெயவேல் படுகாயம் அடைந்தாா்.

இதையடுத்து, காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவா் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT