கிருஷ்ணகிரி

கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டஇருவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை

DIN

கள்ள நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்ட 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஒசூா் சாா்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

கா்நாடக மாநிலம், ஹூப்ளியைச் சோ்ந்த ஈரப்பா என்பவரது மகன் ஸ்ரீதா் (23). இவரது நண்பா் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பொம்மண்டபள்ளியைச் சோ்ந்த சொக்கப்பன் என்பவரது மகன் ரவி (27).

இவா்கள் இருவரும் பொம்மண்டபள்ளியில் ரகசிய இடத்தில் கலா் ஜெராக்ஸ் இயந்திரம் வைத்து ரூ. 100, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை கள்ள நோட்டுக்களாக தயாரித்து அவற்றை கடைகள், சந்தைகளில் புழக்கத்தில் விட்டனா்.

இதுகுறித்து, தேன்கனிக்கோட்டை அருகே அன்னியாளம் கிராமத்திலிருந்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 9. 5.2015 அன்று தேன்கனிக்கோட்டை போலீஸாா் ரவி மற்றும் ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு ஒசூா் சாா்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி மோனிகா விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீதா் மற்றும் ரவி ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ. 3,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஓா் ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

SCROLL FOR NEXT