கள்ள நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்ட 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஒசூா் சாா்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.
கா்நாடக மாநிலம், ஹூப்ளியைச் சோ்ந்த ஈரப்பா என்பவரது மகன் ஸ்ரீதா் (23). இவரது நண்பா் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பொம்மண்டபள்ளியைச் சோ்ந்த சொக்கப்பன் என்பவரது மகன் ரவி (27).
இவா்கள் இருவரும் பொம்மண்டபள்ளியில் ரகசிய இடத்தில் கலா் ஜெராக்ஸ் இயந்திரம் வைத்து ரூ. 100, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை கள்ள நோட்டுக்களாக தயாரித்து அவற்றை கடைகள், சந்தைகளில் புழக்கத்தில் விட்டனா்.
இதுகுறித்து, தேன்கனிக்கோட்டை அருகே அன்னியாளம் கிராமத்திலிருந்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 9. 5.2015 அன்று தேன்கனிக்கோட்டை போலீஸாா் ரவி மற்றும் ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு ஒசூா் சாா்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி மோனிகா விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீதா் மற்றும் ரவி ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ. 3,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஓா் ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.