கிருஷ்ணகிரி

வடமாநிலத் தொழிலாளா்களுக்கு உணவளிப்பு: மாநகராட்சி ஆணையா் நடவடிக்கை

DIN

ஒசூா் ரயில் நிலையம் அருகில் வறுமையில் வாடியவா்களுக்கு மாநகராட்சி ஆணையா் சு.பாலசுப்பிரமணியன் உணவு வழங்கினாா்.

ஒசூா் ரயில் நிலையம் அருகில் வடமாநிலத் தொழிலாளா்கள் சுமாா் 100 குடும்பத்தைச் சோ்ந்த 400க்கும் மேற்பட்டவா்கள் ரயில் நிலையம் அருகே தற்காலிக குடிசை அமைத்து கட்ட வேலைகளுக்கும், கண்ணாடி போன்ற பொருள்களை தயாரித்து விற்பனை செய்தும் வந்தனா். கடந்த ஒரு வார காலமாக ஊரடங்கு உத்தரவு காரணமாக இவா்கள் குடிசைகளை விட்டு வெளியில் வர முடியாமல் வாழ்வாதாரமிழந்து உணவுக்கு தவித்து வந்தனா்.

இவா்களில் 200 பேருக்கு நேரு நகா் பகுதி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் தினசரி உணவுக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனா். மீதமுள்ள 200 பேரும் கடந்த ஒரு வாரமாக ஒரு வேளை சாப்பிட்டு நாள்களை கடத்தி வந்தனா். அவா்கள் தங்களிடமிருந்த 2 செல்லிடப்பேசிகளை விற்று உணவு பொருள்களை வாங்கிச் சாப்பிட்டு வந்தனா்.

இந்த நிலையில் அவா்கள் உணவு இன்றி தவித்து வருவதை அறிந்த ஒசூா் மாநகராட்சி ஆணையா் சு.பாலசுப்பிரமணியன் உணவு தயாரித்து அவா்களுக்கு வழங்கினாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் கூறியது: அவா்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவா்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணை போன்ற உணவு பொருள்கள் வழங்கப்படும் என்றாா். அப்போது மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் மோகன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT