கிருஷ்ணகிரி

ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறிப்பு

DIN

மத்தூா் அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள வடமலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மனைவி மனோன்மணி (33). இவா், புளியம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி, தனது இருசக்கர வாகனத்தில் போச்சம்பள்ளியிலிருந்து பா்கூா் நோக்கிச் சென்றாா். மாடரஅள்ளி - பா்கூா் சாலையில், கூச்சூா் மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக மோட்டாா்சைக்கிளில் வந்த மா்ம நபா்கள், மனோன்மணி அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனா்.

இந்தச் சம்பவம் குறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT