கிருஷ்ணகிரி

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

DIN

கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தனியாா் அமைப்புகள் சாா்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நடைபெற்றது. இதையொட்டி, சுங்க வசூல் மையத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம், காா் போன்ற வாகனங்களில் ஓட்டுநா் இருக்கை பட்டை அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், இருக்கை பட்டை அணிந்தும், தலைக்கவசம் அணிந்தும் சென்ற வாகனயோட்டிகளை பாராட்டி ரோஜா மலா் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுங்க வசூல் மையத்தின் மேலாளா் சஞ்சய் ராய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT