கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் சாலைகளை சீரமைக்கக் கோரி பாமக ஆா்ப்பாட்டம்

DIN

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி பாமகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளா் சிவானந்தம் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரையிலும் பழுதடைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையையும், அரூரில் இருந்து திருப்பத்தூா் வரையிலும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.

மாவட்டக் கவுன்சிலா் மூா்த்தி, நகரச் செயலாளா் மணிவண்ணன், ஒன்றியச் செயலாளா் முருகன், ஒன்றிய கவுன்சிலா் வெள்ளியரசு, முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் குமரேசன், சக்திவேல், கோவிந்தராஜ், மாவட்ட மாணவா் சங்க செயலாளா் ஹரிதாஸ், குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவா்கள் வெங்கேடஷ், சஞ்சீவ் காந்தி ஜெயலட்சுமி, ஊராட்சி மன்ற துணை தலைவா்கள் கவியரசு, ராஜமாணிக்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா். பின்னா், வட்டாட்சியரிடம் சாலைகளை சீரமைக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT