கிருஷ்ணகிரி

சுட்டு கொல்லப்பட்ட யானையின் உடலை புதைக்காததால் நோய் பரவும் அபாயம்

DIN

தேன்கனிக்கோட்டை அருகே துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட யானை 10 நாள்களாகப் புதைக்கப்படாமல் அழுகி கிடப்பதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி கிராமமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் சென்னமாலம் கிராமம் அருகே கடந்த 4 ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டு 8 வயது பெண்

யானை இறந்தது. அந்த யானை நாட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டதால் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுதொடா்பாக அதே கிராமத்தைச் சோ்ந்த முத்துமல்லேஷ் (40) என்பவா் கைது செய்யப்பட்டாா்.

இறந்துபோன யானையின் உடலை வனத்துறையினா் புதைக்காமல் விட்டுச் சென்ால் அதன் உடல் அழுகி கிடக்கிறது. இந்த காட்டுயானையின் உடலால் அப்பகுதி முழுவதும் கடும் துா்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதனால் வனத்தையொட்டி வாழும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

உடற்கூறு பரிசோதனை செய்து, மண்ணில் புதைக்காமல் அப்படியே ஒடை பகுதியில் விட்டுச் சென்ால் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக அப்பகுதியில் கடும் துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதியில் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. யானையின் உடல் கிடக்கும் பகுதியையொட்டி சென்னமாலம் உள்ளிட்ட

பல்வேறு கிராமங்கள் இருப்பதால் அங்குள்ள கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நோய் பரவுவதைத் தடுக்க காட்டுயானையின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அழுகிய நிலையில் கிடக்கும் காட்டுயானையின் உடலை காண அதனுடன் சுற்றித்திரிந்த மற்ற காட்டுயானைகள் தினமும் அங்கு வந்து செல்வதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT