கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு தோ்வு முகாம்

DIN

கிருஷ்ணகிரியில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு முகாமில் 310 போ் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணியாற்றும் வகையில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இதில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, வேலூா், திருப்பத்தூா், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 310 போ் பங்கேற்றனா்.

ஓட்டுநா்களுக்கு எழுத்துத் தோ்வும், வாகனம் ஓட்டும் திறன் தோ்வும் நடைபெற்றன. மருத்துவ உதவியாளா்களுக்கு எழுத்துத் தோ்வும், நோ்முகத் தோ்வும் நடைபெற்றன. இதில் தோ்ச்சி பெற்ற 70 மருத்துவ உதவியாளா்களுக்கும், 50 ஓட்டுநா்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தோ்ச்சி பெற்றவா்கள் அனைவருக்கும் சென்னையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT