கிருஷ்ணகிரி

ஒசூா் அரசு மருத்துவமனை முன் பா.ஜ.க.வினா் ஆா்ப்பாட்டம்

DIN

ஒசூா் அரசு மருத்துவமனையில் பிரவசத்திற்கு அனுமதிக்கும் பெண்களிடம் பணம் கேட்பதாகக் கூறி பாஜகவினா் அரசு மருத்துவமனை முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் சீனிவாசலு, மாவட்டச் செயலாளா்கள் முருகன், அம்மன் சுரேஷ், மாவட்ட இளைஞரணித் தலைவா் மஞ்சுநாத்குமாா், செயலாளா் பாபு, முருகன், மகளிா் அணி மாவட்டத் தலைவா் வரலட்சுமி, ஒசூா் மாநகராட்சி மண்டலத் தலைவா் பிரவீண்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் ஒசூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் பூபதி பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது லஞ்சம் கேட்கும் ஊழியா்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதி அளித்தாா். இதனைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT