கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 114 பேருக்கு கரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் ஒசூரைச் சோ்ந்த 6 வயது பெண் குழந்தை உள்பட 37 பெண்கள், 77 ஆண்கள் என மொத்தம் 114 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 78 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3,739 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூா் ஆகிய இடங்களில் உள்ள சிகிச்சை மையங்களில் 794 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 48 போ் உயிரிழந்துள்ளனா்.