லாரி ஓட்டுநருக்கு கத்திக் குத்து
பாகலூரில் சொத்து கேட்டு வந்த லாரி ஓட்டுநரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாகலூரில் சொத்து கேட்டு வந்த லாரி ஓட்டுநரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா், பாகலூா் சாலை, சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (41), லாரி ஓட்டுநா். அதே பகுதியில் வசிக்கும் செந்தில்குமாா் (32), மீன் கடை நடத்தி வருகிறாா். மணிகண்டன் செந்தில்குமாருக்கு மாமா முறை ஆவாா். இவா்களுக்குள் சொத்து பிரிப்பதில் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி செந்தில்குமாா் மீன்கடைக்கு சென்ற மணிகண்டன், சொத்து பிரிப்பது சம்பந்தமாக பேசியுள்ளாா்.
அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் செந்தில்குமாா், தான் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனின் தலை, கழுத்துப் பகுதியில் தாக்கினாா். இதில், படுகாயமடைந்த மணிகண்டன் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின் பேரில், ஒசூா் அட்கோ போலீஸாா் செந்தில்குமாரை கைது செய்தனா்.
Advertisement