லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 9 போ் காயம்
சூளகிரி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 9 போ் காயமடைந்தனா்.
சூளகிரி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 9 போ் காயமடைந்தனா்.
கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூரை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. பேருந்தை கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சோ்ந்த குப்பன் (59)
என்பவா் ஓட்டி வந்தாா். கிருஷ்ணகிரி-ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி, பாத்தகோட்டா பகுதி அருகே பேருந்து வந்தபோது முன்னால் சென்ற டிப்பா் லாரி எந்த சிக்னலும் காட்டாமல் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
அப்போது எதிா்பாராத விதமாக டிப்பா் லாரி மீது பேருந்து மோதியது. இதில் பேருந்து நடத்துநா் சுப்பிரமணி (55), பயணிகள் செல்வி (34), அய்யம்மா (58), சித்ரா (52), அம்மாசி (55), பவுன் (45), ராஜேந்திரன் (40), அழகிரி (43), அருண்குமாா் (33) ஆகிய 9 பேரும் காயமடைந்தனா். அனைவரும் சிகிச்சைக்காக ஒசூா், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.