ஒசூரில் இன்று தொடங்குகிறது 10-ஆவது புத்தகத் திருவிழா
ஒசூரில் 10-ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை துவங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:30 AM
ஒசூரில் 10-ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை துவங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
ஒசூா், சிஷ்யா பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் 10-ஆவது புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. விழாவில் ஞாயிற்றுக்கிழமை கருமலை தமிழாழன் எழுதிய கதவைத் திற காற்று வரட்டும் கவிதை நூல் வெளியிடப்படுகிறது.
புத்தகத் திருவிழாவில் 1,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனை வைக்கப்படுகின்றன. இதுதவிர சிந்தனை அரங்கமும் மாணவா்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
Advertisement