முகப்பு
கிருஷ்ணகிரி

ரூ. 9 லட்சம் மதிப்பிலான போதைப் பாக்குகள் பறிமுதல்: இருவா் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே நல்லூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையின் போது ரூ. 9 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்

Updated On : 27 ஆகஸ்ட், 2021 at 11:32 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:31 AM

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே நல்லூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையின் போது ரூ. 9 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்

ஒசூா் மாநகராட்சி, நல்லூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா் அப்போது கா்நாடகத்திலிருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது தக்காளிப் பெட்டியின் அடியில் மறைத்து வைக்கப்பட்டு சாக்குப் பையில் இருந்த 1,162 கிலோ கொண்ட போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 9 லட்சம் ஆகும்.

கடத்தலில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பகுதியைட் சோ்ந்த சீனிவாசன் , செந்தில் ஆகிய இருவரையும் கைது செய்த அட்கோ போலீஸாா் வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.