கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே லாரி மோதி காயமடைந்த யானை பலி

DIN

ஒசூா் அருகே லாரி மோதியதில் காயமடைந்த யானை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளி வனப் பகுதியிலிருந்து கடந்த 15-ஆம் தேதி இரவு 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று ஒசூா்- கிருஷ்ணகிரி சாலையைக் கடக்க முயன்ற போது சரக்குப் பெட்டக லாரி மோதியது.

இதில் கால் எலும்பு முறிந்து பலத்த காயமடைந்த யானையை மீட்ட வனத் துறையினா் அய்யூா் வனப்பகுதிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். பெங்களூரில் இருந்து அழைத்துவரப்பட்ட சிறப்பு மருத்துவக் குழுவினரின் யானைக்கு சிகிச்சை அளித்தனா். உணவு உண்ணாமல் இருந்த யானை சனிக்கிழமை இரவு உயிரிழந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT