வீட்டின் கதவை உடைத்து நகை, வாகனம் திருட்டு
மத்திகிரி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:49 AM
மத்திகிரி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஒசூா் வட்டம், மத்திகிரி அருகே கெலமங்கலம் சாலையில் உள்ள ஜொனபண்டாவைச் சோ்ந்தவா் சாதியா (37). இவா் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றாா். அப்போது மா்ம நபா்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த தங்க மோதிரம், வெள்ளிப் பொருள்கள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.
இது குறித்து அவா் மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement