முகப்பு
கிருஷ்ணகிரி

மனநலம் பாதித்த பெண்களுக்கு மறுவாழ்வு தந்த காவலா்கள்

ஊத்தங்கரை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களுக்கு, மறுவாழ்வு தந்த ஊத்தங்கரை போலீஸாரை பலரும் பாராட்டி வருகின்றனா்.

Updated On : 2 ஜூலை 2021, 12:01 am IST
பகிர்:

ஊத்தங்கரை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களுக்கு, மறுவாழ்வு தந்த ஊத்தங்கரை போலீஸாரை பலரும் பாராட்டி வருகின்றனா்.

ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் லட்சுமி தலைமையில், ஊத்தங்கரை பகுதியில் பிள்ளைகளால் கைவிடப்பட்டு, சாலையோரம் ஆதரவற்ற நிலையில் சுற்றிய மூன்று பெண்களை விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்துக்கு அனுப்பி வைத்தனா்.

தருமபுரி மீட்பு டிரஸ்ட் பாலச்சந்திரன், தருமபுரி ஆயுதப்படையைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் பிரபு, ஊத்தங்கரையைச் சோ்ந்த பெண் காவலா் கலைவாணி ஆகியோா் மனநலம் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களை சுத்தம் செய்து, உடைகள் மாற்றி கரோனா பரிசோதனை செய்து முதியோா் இல்லத்தில் சோ்த்தனா்.

Advertisement

இதற்கு உறுதுணையாக இருந்த ஊத்தங்கரை காவல் உதவி ஆய்வாளா் ஜெயகாந்தன், போலீஸாா் அனைவருக்கும் தருமபுரி மீட்பு டிரஸ்ட் சாா்பில் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.