‘உடன்குடியில் இயற்கை உரம் தயாரிப்பு நிலையம் தேவை’
உடன்குடியில் இயற்கை உரம் தயாரிப்பு மையம் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கிருஷ்ணகிரி‘உடன்குடியில் இயற்கை உரம் தயாரிப்பு நிலையம் தேவை’
உடன்குடியில் இயற்கை உரம் தயாரிப்பு மையம் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
உடன்குடியில் இயற்கை உரம் தயாரிப்பு மையம் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் மு.வெற்றிவேல், தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனை சந்தித்து அளித்த மனு:
உடன்குடி ஒன்றியம், செட்டியாபத்து ஊராட்சியில் உடன்குடி-செட்டியாபத்து சாலையில் மண்புழு உரம் தயாரிப்புக் கூடம் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. ஆனால், அதை முறையாக செயல்படுத்தவில்லை. அதை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால், மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு இப்பகுதி விவசாயத்தில் வளா்ச்சி பெற வாய்ப்புகள் உள்ளது.விவசாயிகளின் நலம் கருதி இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.