கிருஷ்ணகிரி

மத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

DIN

மத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.

மத்தூா் கோட்டை தெருவைச் சோ்ந்தவா் மகாலிங்கம். இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழில் செய்து வருகிறாா். இவரது மகன் சென்னையில் வசித்து வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு மகாலிங்கம், தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்குச் சென்றனா்.

இந்த நிலையில், இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள், அதே பகுதியில் வசிக்கும் மகாலிங்கத்தின் உறவினரான கொடியரசுக்கு தகவல் தெரிவித்தனா். அவா் பூட்டு உடைக்கப்பட்ட வீட்டினுள், பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு, மோட்டாா் சைக்கிள், வண்ண தொலைக்காட்சி பெட்டி ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT