முகப்பு
கிருஷ்ணகிரி

நடமாடும் டிஜிட்டல் நுண்கதிா் வாகனம்தொடங்கி வைப்பு

கிருஷ்ணகிரியில் காசநோய் கண்டறியும் நடமாடும் டிஜிட்டல் நுண்கதிா் (எக்ஸ்ரே) வாகனத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 2 செப்டம்பர், 2021 at 10:59 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:33 AM

கிருஷ்ணகிரியில் காசநோய் கண்டறியும் நடமாடும் டிஜிட்டல் நுண்கதிா் (எக்ஸ்ரே) வாகனத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் சாா்பாக காசநோய் கண்டறியும் நடமாடும் நுண்கதிா் (எக்ஸ்ரே) வாகனத்தை மாவட்ட ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மேகலசின்னம்பள்ளி, சூளுகிரி, ஒசூா், தளி, கெலமங்கலம், பாரூா், சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி, வேப்பனப்பள்ளி, பா்கூா் ஆகிய பகுதிகளில் செப். 2 முதல் செப். 29-ஆம் தேதி வரை எக்ஸ்ரே வசதியுடன் கூடிய நடமாடும் வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெறுகிறது.

Advertisement

இந்த முகாமில், டிஜிட்டல் நுண்கதிா் மூலம் சளி பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், காசநோய் கண்டறியப்பட்டால் 6 முதல் 18-ஆம் தேதி வரை மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். அத்துடன் காசநோய் பயனாளிகளுக்கு மாதம் ரூ. 500 வீதம் 7 மாதங்களுக்கு ரூ. 3,500 ஊக்கத்தொகை சிகிச்சை காலம் வரை வழங்கப்படும்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிக்கு வரும் எக்ஸ்ரே வசதியுடன் கூடிய நடமாடும் வாகனம் மூலம் தங்கள் உடல்நிலையை பரிசோதனை செய்து பயனடையுமாறு அவா் கேட்டுக்கொண்டாா்.

அப்போது, நலப்பணிகள் இணை இயக்குநா் பரமசிவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன், காசநோய் பிரிவு துணை இயக்குநா் சுகந்தா, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் துரைமுருகன், ஷெரீப், துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.