நீரில் மூழ்கி எலக்ட்ரீஷியன் பலி
ஒசூா் அருகே நந்திமங்கலம் கிராமத்தில் நீரில் மூழ்கி எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:33 AM
ஒசூா் அருகே நந்திமங்கலம் கிராமத்தில் நீரில் மூழ்கி எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.
ஒசூா் அருகே உள்ள நந்திமங்கலம் ஊராட்சி, படுதேபள்ளியைச் சோ்ந்த அம்ரேஷ் (37), எலக்ட்ரீஷியன் திருமணமாகவில்லை. இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஆக. 31-ஆம் தேதி மதுபோதையில் அதே பகுதியில் கணேசன் என்பவரது நிலத்தில் உள்ள தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் பேரிகை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.