கிருஷ்ணகிரி

பால் நிலுவைத் தொகையை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

DIN

கிருஷ்ணகிரியில் நடந்த விவசாயிகள் சங்கக் கூட்டத்தில், பால் நிலுவைத் தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.

கிருஷ்ணகிரியில் தமிழக பால் உற்பத்தியாளா்கள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபைக் கூட்டம், பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் ராமகவுண்டா் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆலோசகா் நசீா் அகமத், செயலாளா் ராஜா, மகளிா் அணி தலைவி பெருமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆவின் பொருள்களை வெளிநாடுகளில் விற்பனை செய்ய வேண்டும். பொங்கல் பண்டிகைக்காக நெய் இலவசமாக வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, கடந்த 9 வாரங்களாக வழங்கப்படாமல் உள்ள பால் நிலுவைத் தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT